கருப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத கூட்டம் கந்த சஷ்டி கவசத்தையும் முருகப்பெருமானையும் ஆபாசமாகப் பேசி விடியோ வெளியிட்டதை கண்டித்தும் அந்த அயோக்கியன்கள் கூட்டத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி 16.7.20 அன்று காலை 10 மணிக்கு இந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்திட பாஜக அழைக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே நான் ஆன்லைன் புகார் அளித்துள்ளேன். தமிழக பாஜக சார்பில் சென்னை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் அந்த கும்பலை தமிழக அரசு கைது செய்யாதது துரதிருஷ்ட வசமானது.
உண்மையில் அறுபடை வீட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கோவில்களையும் காப்பாற்றாமல் இந்துக்களின் கௌரவத்தையும் காப்பாற்றாது ஒரு துறை எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.
எனவே முருகப்பெருமானை இழிவுபடுத்தும் கூட்டத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நம் போராட்டம் தொடரும்.
அதன் முதல் படியே முருகன் அவதரித்த கார்த்திகை நட்சத்திரம் அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஒவ்வொரு முருகபக்தரும் தன் வீட்டு வாசலில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தின் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து நம் போராட்டத்தை நடத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக