ஞாயிறு, 10 மே, 2020

மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது. எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? - மு.க.ஸ்டாலின்


மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது.
எதிர்க்கட்சி  MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா?  - மு.க.ஸ்டாலின் 

எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-2022) மட்டும் நிறுத்துவதாக அறிவித்து, இப்போது 2019-20 ஆம் ஆண்டிற்கான நிதியையும் ரத்து செய்யும் சுற்றறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.

பொருளாதாரத்தை சீர் செய்ய வோ நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு - எம்.பிக்களின் உரிமைகளையும் பறிப்பது - வேதனையானது; மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல்; பணிகள் துவங்கி விட்ட நிலையில் - கொடுத்ததைப் பாதியில் பறிப்பது பண்பாடாகாது

எதிர்க்கட்சி எம்.பிக்கள் தம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.

பாராளுமன்ற பாஜக உறுப்பினர்களே கூட, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மவுனமாக வேதனையுறும் நிலையில் மக்களுக்கு துரோகம் இழைத்திடும், சுற்றறிக்கையை மட்டுமின்றி ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக