ஞாயிறு, 30 ஜூன், 2019

11-வது தமிழ் புத்தகம்

11-வது தமிழ் புத்தகம்


  • தமிழ் மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள்
  • தாயுமானவர் ஆற்றிய பணி - அரசுக் கணக்கர்
  • பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப் பத்திரிக்கை - இந்தியா
  • பாரதியார் மொழி பெயர்த்த நூல் - கீதை
  • புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
  •  பேகன் - கடையெழு வள்ளல்களில் ஒருவன் 
  • கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈத்தவன் - பேகன்
  • களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 120
  • ஔவைக்கு அரிய நெல்லிக்கனியை ஈந்தவன் - அதியமான்
  • தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாரட்டப் பெறுவது - திருக்குறள்
  • திருக்குறள் என்பது - அடையடுத்த கருவியாகு பெயர்
  • அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
  • அறத்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள் - புரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  • திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை
  • சீவகசிந்தாமணியை இயற்றியவர் - திருத்தகக் தேவர்
  • சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்  - சீவகன்
  • சீவகசிந்தாமணிக்கு உரை கண்டவர் - நச்சினார்கினியார்
  • சீவகசிந்தாமணியில் பயின்று வரும் பாவினம் - விருத்தம்
  • உமறுப்புலவரின் ஆசிரியர் - கடிகை முத்துப் புலவர்
  • செலவியற்காண்டம் எனப்படுவது - ஹிஜ்ரத்துக் காண்டம்
  • சின்னச்சீறா என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் - மனூ அகமது மரைக்காயர்
  • உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல் - முதுமொழிமாலை
  • நபிகள் பெருமான் அபூக்கருடன் தங்கியிருந்த குகையுள்ள மலையின் பெயர் - தெளர்
  • பாந்தள், உரகம், பன்னகம், பணி, அரவு என்னும் சொற்களின் பொருள் - பாம்பு
  • விடமீட்ட படலம் எந்த காண்டத்தில் உள்ளது. - ஹிஜ்ரத்துக் காண்டம்
  • மனோன்மணீயத்தை இயற்றியவர் - சுந்தரம்பிள்ளை
  • மனோன்மணீயம் நூலின் வரும் துணைக்கதை - சிவகாமி சரிதம்
  • சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது - பல்கலைக்கழகம்
  • மனோன்மணியம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல் - இரகசிய வழி
  • ஜீவகன் புதுவதாய்க் கோட்டை நிறுவிய இடம் - திருநெல்வேலி
  • பலபட்டைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் - தென்றல் விடுதூது
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்கம்
  • தமிழில் முதலில் எழுந்த பரணி - கலங்கத்துப்பரணி
  • தென்தமிழ் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் போற்றியவர் - ஓட்டக்கூத்தர்
  • போர்முனையில் ஆயிரம் யானைகளை வென்ற வீரரைப் பாடுவது - பரணி
  • செங்கீரைப் பருவம் பிள்ளைத் தமிழில் - இரண்டாம் பருவம்
  • தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த நூற்றாண்டு - 18-ம் நூற்றாண்டு
  • கிள்ளைவிடு தூதில் உள்ள கண்ணிகள் - 239
  • முதற்குலோத்துங்கனின் படைத்தளபதி - கருணாகரத் தொண்டைமான்
  • ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவம் - 7


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக