தமிழ் 12-வது புத்தகம் குறிப்புகள்
- ஒன்றே யென்னின் என்னும் கடவுள் வாழ்த்து பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
- புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
- புறநானூற்றின் திணைகள் - 11
- தமிழரின் வாழ்வியல் சிந்தனைக்கு கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
- புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
- அகநானூறு மணிமிடை பருவத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 180
- அகநானூற்றுப் பாக்களின் அடிவரையரை - 13-31
- நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
- நற்றிணைப் பாக்களின் அடி வரையறை - 9-12
- கபிலரை வாய்மொழிக் கபிலர் என்று போற்றியவர் - நக்கீரர்
- குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
- குறட்பா என்பது - ஈரடி வெண்பா
- அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எண்ணிக்கை - 38
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
- கொண்டாடப்படும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.31
- பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஓழிபியல்
- திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
- வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
- சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
- சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
- சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு காதை
- தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- வரி என்பது - இசைப்பாடல்
- தாம் இயற்றிய இராம காதைக்கு கம்பர் இட்ட பெயர் - இராமவதாரம்
- கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுககு கூறப்படும் கணக்கீடு - 96
- உத்தரகாண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்
- சுந்தரகாண்டம் இராமாயணத்தில் - ஐந்தாங்காண்டம்
- சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் - அனுமன்
- சிறியதிருவடி என்றழைக்கப்படுபவர் - அனுமன்
- தனயை யென்ற சொல்லின் பொருள் - மகள்
- இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
- சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒரு திங்கள்
- வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
- கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
- வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி
- திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்து தந்தது- இலத்தீன் மொழியில்
- தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர்- சுசைமாமுனிவர்
- கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்
- திவ்யகவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்
- புலன் என்னும் இலக்கிய வகை - பள்ளு
- பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
- பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது
- முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா
- பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம
- சாகித்திய அகேடமி பரிசு பெற்ற நூல் - பிசிராந்தையார்
- பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்
- வாழ்வினிற் செம்மைச் செய்பவன் நீயே என்ற பாடலை வாழந்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு - புதுவை அரசு
- வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்
- பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 5
- நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்க்கு உழைத்தல் என்று பாடியவர் - பாரதியார்
- இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்
- செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்
- பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவிலியர் விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்
- கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் - வாணிதாசன்
- சுரதா நுல்களுள் தமிழ் வளர்ச்சி துறையின் பரிசினைப் பெற்ற நூல் - தேன் மழை
- தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழண்னை விருது பெற்ற கவிஞர் - அப்துல் ரகுமான்
- உவமைக் கவிஞர் எனப் பாரட்டப்பட்டவர் - சுரதா
- கிருத்தவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர் - எச். ஏ.கிருஷ்ணப்பிள்ளை
- சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
- திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர் - பெரியவாச்சான்பிள்ளை
- கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஓட்டக்கூத்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக