புதன், 26 ஜூன், 2019

2014 - 2019 க்கும் இடையில் கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது - டி.கே.ரங்கராஜன்

பாஜக ஆட்சியாளர்களும் பெரு முதலாளிகளுமாக சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது என்றும் 
கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், அதன் பலனாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் அளவில் நிதி கைமாறு பெற்றிருக்கிறது 
-டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உறுப்பினர்)
(CPIM)தலைவர் 


மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன்  உரையாறினார்...

கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக மிகக்கடுமையான இந்துத்துவா மதவெறி தாக்குதல் களைக் கட்ட விழ்த்துவிட்டது; காங்கிரஸ் கட்சியின்
மென்மையான முறையில் மேற்கொண்ட அணுகுமுறையை மக்கள் ஏற்கவில்லை,  அதன் பிரதிபலிப்பே தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வி என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எதிர்க் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட வலுவான ஒற்றுமையும் தொடர்ச்சியான பாஜகவின் மதவெறிக்கும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிராக, மக்கள் போராட்டங்களும் வாக்காளர்களை ஒன்றுபடுத்த உதவியது.

எமது கட்சியின் நிலை 
 "மார்க்சியம் ஒரு போதும் மரித்துப் போகாது. மார்க்சியம் என்பது உயிரோட்டம் உள்ள ஒரு மாபெரும் தத்துவமாகும். இப்போது நாங்கள் ஓற்றை இலக்கம் என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. ஆனால் மார்க்சியம்  இறுதியில் வெல்லும்!" என்றும் பேசினார்.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசாங்கம் என்ன செய்தது? 

முதலில் பண மதிப்பிழப்பைக் கொண்டுவந்தது. பின்னர் ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தது. அதனால் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தற்கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்  அதிகரித்திருக்கின்றன.  கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கின்றன. இருந்தும் கூட பாஜக வெற்றி பெற்றது. இது எப்படி சாத்தியம் ஆனது ? ஒரே ஆயுதம்  புல்வாமா மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல். திருவாளர் மோடி, பணமதிப்பிழப்பை அறிவித்த போது அது பயங்கரவாதத்தை ஒழித்திடும் என்று கூறினார். ஆனால் இப்போதும் பயங்கரவாதம் இருக்கிறது.

கூட்டுக் களவாணிகள்
ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு உதவி இருக்கிறது. இரு உதாரணங்கள் என்னால் கூற முடியும். 
அம்பானிக்குச் சொந்தமான ரிலை யன்ஸ் நிறுவனத்திற்கு 2014இல் 2300 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருந்தது. 2018இல் அது 5500 கோடி களாக உயர்ந்திருக்கிறது. 2014இல்  அதானியின்  சொத்து மதிப்பு260 கோடி. 2018 இல் அது 1190 கோடி. இதேபோன்றே நம் நாட்டிலுள்ள அனைத்து பெரும் முதலாளிகளின் சொத்துக்களின் மதிப்பும் உயர்ந்திருப்பதைப் பார்க்க முடியும். பாஜக அரசாங்கம், முதலாளி களுக்கு உதவி இருக்கிறது. அதற்குக் அவர்கள் இந்த அரசுக்கு உதவி இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளின் பணம், கார்ப்பரேட்டுகளின் ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் அனைத்தும் இந்த அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன. மொத்தத் தேர்தல் செலவினத் தொகையில் 45 சதவீதம், பாஜக செலவு செய்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருப்பதாக ஓர் ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது.

வளர்ச்சியின் பயணம்? இதனை ஏற்க முடியாது.

குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில், “வளர்ச்சிக்கான பயணம் 2014இல் தொடங்கியது” என்று குறிப் பிட்டிருக்கிறார். இதனை ஏற்க முடியாது. வளர்ச்சி தொடர்பாக இந்திய நாடு ஒரு வரலாற்றைப் பெற்றிருக்கிறது. மொகலாயர்கள் காலத்தில் ஒரு வளர்ச்சி இருந்ததைப் பார்த்தோம்.  பிரிட்டிஷாரும் இந்தியாவை வளர்த்தெடுத் திருக்கிறார்கள். அது, அவர்களின் சொந்த நலனுக்கானது என்ற போதிலும் கூட, அவர்களும் வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின்னர், ஆட்சிபுரிந்த பல அரசாங்கங்களும் நாட்டை வளர்த்திருக்கின்றன. ஆனால் இதை யெல்லாம் ஒதுக்கிவிட்டு இப்போது இவ்வாறு “குடியரசுத் தலைவர் உரை”யை எழுதித்தந்துள்ள ஆளும் கட்சியினர்  கூறியிருப்பதன் மூலம், வாஜ்பாய் அங்கம் வகித்த அவர்கள் ஜனதா அர சாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களின் சாதகமான அம்சங்களைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள்.

தாகூர் தேசியம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்?

இந்தியாவின் வரலாறென்பது எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் சொந்தமானது அல்ல, குடியரசுத் தலைவர் அவர்கள், நாராயணகுருவை மேற்கோள் காட்டி யிருக்கிறார், ரவீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார். மகாத்மாகாந்தியை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோல் அவர் வள்ளலாரையும், திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டி யிருந்தாரானால் நான் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். தாகூர் தேசியம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்? பல்வேறு இனங்களின் சங்கமத்தால் உருவானது திராவிடர்கள், அதாவது தென்னிந்தியாவில் வாழ்பவர்கள் இதற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். தாகூர் இதனை அங்கீகரித்திருக்கிறார். திராவிடர்கள், ஆரியர்கள், புராதன கிரேக்கர்கள், பாரசீகர்கள், மேற்கிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் வந்த முகமதியர்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். கடைசியாக வந்த ஆங்கிலேயர்களும் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். தாகூர் இவ்வாறுதான் கூறியிருக்கிறார். எனவே, இந்தியாவில் வாழும் பல்வேறு இனக்களுடனும் சம்பந்தப்பட்டது. 

விவசாயிகளை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?

குடியரசுத் தலைவர் தன் உரையில், விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்குவதற்காக ஒரு திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பாஜகவின் சென்ற தேர்தல் அறிக்கையில், பாஜக, டாக்டர் எம்.எஸ்.சுவாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று உறுதிமொழி கூறியிருந்தது. அவை அமல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

வங்கி மோசடி அதிகரிப்பு

இந்தியாவில் வங்கி மோசடி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2018-19இல், 71,500 கோடி ரூபாயைத் தொட்டிருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. வங்கி மோசடி தொடர்பாக 6,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியை நீரவ் மோடி,  இப்போது ஐஎல்&எப்எஸ் உள்கட்டமைப்பு மோசடி மற்றும் தேவன் ஹவுசிங் திவால் மோசடி என வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் நிதி நிலைமையைக் கடுமையாகப் பாதிக்கும் அம்சங்களாகும்.

மக்களை முட்டாளாக்காதீர்கள்!

 “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. நம் நாடு கூட்டாட்சி அமைப்பு முறையிலானது. இதுதொடர்பாக நம் அரசமைப்புச் சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதனை ஒரே இரவில் நாம் மாற்றிவிட முடியாது.  இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக