செவ்வாய், 25 ஜூன், 2019

மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி சாம்பியன்

மகளிர் உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.



ஜப்பானின் ஹிரோசிமா நகரில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி! இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை ராணி ரம்பால் ஒரு கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் போட்டது. இதன்பின் ஆட்டம் மிகவும் சுவரஸ்யமாகச் சென்றது. இரு அணிகளும் கோல் போடும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 45-வது நிமிடத்தில் அசத்தான ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பின் 60-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.


முடிவில் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ராணி தேர்வு செய்யப்பட்டார். அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் குர்ஜித் கவுர் (11 கோல்) முதலிடம் பிடித்தார்.வாகை சூடிய இந்திய அணி 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக