- திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் (தண்டலம்)
- திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை - 430
- வண்மையை உயிரில் வைத்த இந்த அடியில் வண்மை என்னும் பொருள் - கொடைத்தன்மை
- குறள் வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. - 133
- உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதால் திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர் - உலகப்பொதுமறை
- உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மை வெளிப்படுத்துவது - வாய்மை
- வாய்மை எனப்படுவது யாதெனில் - மற்றவர்க்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
- உலகில் மிகப்பழைமையான நிலப்பகுதி - குமரி கண்டம்
- தமிழில் எந்த பெயர்கள் மிகவும் குறைவு - இடுகுறிப் பெயர்
- உலக மொழிகளில் சிறந்து விளங்குவது தமிழ்மொழி
- அம்மை, அப்பன் என்றும் சொல் வழங்கும் நாடு. - நாஞ்சில் நாடு
- வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி - தமிழ்மொழி
- ஆய்தம் எந்த எழுத்துவகையைச் சார்ந்தது - சார்பெழுத்து
- சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் - 10
- முதலெழுத்துகளின் எண்ணிக்கை - 30
- தனித்து இயங்கும் எழுத்துக்கள் - முதலெழுத்து
- திரு.வி.க ஆசிரியராக இருந்த இதழ் - நவசக்தி
- ஆற்றூர் பேச்சவழக்கில் மருவியுள்ளது எந்த பெயர் - ஆத்தூர்
- புறநானூறு எந்த வகையான நூல்களுள் ஒன்று. - எட்டுத்தொகை
- நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிகீரனார்
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கிபோது கவரி வீசிய மன்னன் - சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
- முதுமொழிக்காஞ்சி என்பது எந்த திணையின் துறைகளுள் ஒன்று - காஞ்சி
- முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் - மதுரைக் கூடலூர் கிழார்
- இளமையைக் காட்டிலும் சிறந்தது - நோயற்ற வாழ்வு
- முதுமொழிக்காஞ்சிக்கு வழங்கப்படும் வேறு பெயர் - அறிவுரைக் கோவை
- கற்றலைவிடவும் சிறந்தது - ஒழுக்கமுடைமை
- உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- மீனாட்சி சுந்தரனார் நோய்க்கு மருந்து என எதனைக் குறிப்பிடுகிறார் - இலக்கியம்
- மீனாட்சி சுந்தரனார் எதனைப் பாடுவதில் வல்லவர் - தலப்புராணம்
- உயிர்மெய் எழுத்துகள் எதனுள் அடங்கும் - சார்பெழுத்து
- மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம் பற்ற நூல் - புறநானூறு
- சோழருக்குரிய மாலை - ஆத்திப்பூ
- உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை - 216
- உயர்கல்விபெற இராமானுஜம் எங்கு சென்றார் - இங்கிலாந்து
- சென்னைத் துறைமுகம் சார்பில் வாங்கிய குடிநீர்க்கப்பலின் பெயர் - சீனிவாச இராமானுஜம்
- இராமனுஜக் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் - சென்னை
- இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
- இராமானுஜம் ஆசிரியரிடம் எதற்கு மதிப்புடையது என வாதிட்டார் - சுழியம்
- இராமானுஜம் எழுத்தராக பணிபுரிந்த இடம் - துறைமுகம்
- காளமேகப்புலவர் எந்த கோவிலில் பணிபுரிந்தார் - திருவரங்கம்
- இராமானுஜத்தின் கட்டுரைகள் வெளியான தலைப்பு - பெர்னௌலிஸ் எண்கள்
- தனிப்பாடல் திரட்டு எனும் நூலைத் தொகுத்தவர் - சந்திர சேகர கவிராசப்பண்டிதர்
- இலண்டனிலுள்ள எந்த கல்லூரியில் இராமானுஜம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார் - திரினிட்டி
- கிழவிக்கு மருதுபாண்டி அளித்த ஊர் - பழஞ்சோற்று குருநாதனேந்தல்
சனி, 22 ஜூன், 2019
தமிழ் 7-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக