வியாழன், 27 ஜூன், 2019

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இணையவழி குளறுபடி - E.R ஈஸ்வரன் (KMDK)

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இணையவழி குளறுபடிகளை அடுத்து தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறையிலேயே மீண்டும் தேர்வை நடத்த முன்வர வேண்டும்.
-E.R ஈஸ்வரன்
(KMDK)


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 814 கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முதலாக இணையவழியில் 23.06.2019 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வை நடத்தியது. 

அதில் நாமக்கல் மாவட்டம், KSR பொறியியல் கல்லூரியில் 3 மையங்களில் சுமார் 2200 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 மையங்களில் இணையவழி தேர்வில் கம்ப்யூட்டர்கள் வேலை செய்யவில்லை என்று சுமார் 1020 தேர்வர்கள் தேர்வு எழுத முடியவில்லை. ஆதலால் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான தேர்வு முறையை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு எழுத முடியாமல் குளறுபடி நடந்தது. ஆதலால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுத முடியாதவர்களுக்கும், தேர்வில் பாதியுடன் வந்தவர்களுக்கும் மறுதேர்வு நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இத்தேர்வு முறையில் தேர்வர்கள் எழுதும் விவரங்கள் அதாவது எத்தனை கேள்விகள் சரியாக எழுதினோம் என்ற விவரம் தெரியாமல் போய்விடும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த தவறு செய்தாலும் தேர்வர்களுக்கு அதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆகவே 23.06.2019 ஆம் தேதியில் நடைபெற்ற குழப்பமான தேர்வை முழுவதும் ரத்து செய்து, இணையவழி தேர்வு முறையை கைவிட்டு, Offline தேர்வு அதாவது OMR Sheet நகல் கொடுத்து நேர்மையாக நடத்துமாறு தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக