ஞாயிறு, 30 ஜூன், 2019

மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது - கி.வீரமணி

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற எல்லாமே ‘‘ஒரே ஒரே’’ என்று கூறும் மத்திய பி.ஜே.பி. அரசு - இப்பொழுது ஒரே ரேசன் கார்டு என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது.
மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது
- கி.வீரமணி அறிக்கை
(திராவிடர் கழகம் தலைவர் )



ஒற்றை ஆட்சி முறைக்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடு
ஒரே நாடு (இந்துராஷ்டிரம்), ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத கலாச்சாரம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கு விடை கொடுக்கும் ஒரே அதிபர் என்பதை நோக்கியே) என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது,

கூட்டாட்சித் தத்துவத்தை (Federal) ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை (மத்திய) ஆட்சி முறைக்கே (Unitary system of Government) என்பதற்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட சலுகை விலையில் (கோதுமை 2 ரூபாய், அரிசி கிலோ மூன்று ரூபாய்) என்பது போன்று தருவதை மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் (Migrant Population) பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்!

‘‘The biggest beneficiary of this he (Paswan) said, would be migrant labourers who move to other states to seek better job opportunities.’’

அந்தந்த மாநிலத்தின் உணவு நிலவரம், உணவு விநியோக முறை எல்லாம் ஒரே சீரான முறையில் இருக்கிறதா என்பது முதல் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக