வெள்ளி, 28 ஜூன், 2019

நதிகளை இணைக்கும் படி நான் மத்திய அரசை வேண்டுகிறேன். - ஆர்.எஸ்.பாரதி எம்.பி

"கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முதல்கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்!"

- ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
திமுக மாநிலங்களவை

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி 26.06.2019 அன்று ஆற்றிய உரை வருமாறு : இந்த முக்கியமான பிரச்சினையில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினை பற்றி மேன்மைக்குரிய இந்த அவையில் விவாதிக்கவேண்டும். எனக்கு முன்னால் பேசிய உறுப்பினர்கள் அனை வரும் நாடு சந்தித்து வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றி குறிப்பிட்டார்கள் அவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட தைப் போல 2020 ஆம் ஆண்டில் இந்தி யாவில் உள்ள 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும். 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவிகிதம் பகுதி யில் நிலத்தடி நீர் இருக்காது என்று கூறப்படுகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இது அனைத்துப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்தவற்கான முக்கியமான நேரம். காலம் குறைவாக இருக்கும் காரணத் தால் நான் 4 அல்லது 5 கருத்துக்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக நதிகளை இணைக்கும் படி நான் மத்திய அரசை வேண்டுகிறேன். இது உங்களுடைய தேர்தல் அறிக்கை யில் இடம்பெற்றிருந்தது. ஆனால் குடியரசுத் தலைவரின் உரையில் நதிகளை இணைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில் லை. எனவே நான் இந்திய அரசை குறைந்தபட்சம் முதல் கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். ஏனெனில் தமிழ் நாடு குறிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட சென்னையில் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிப்பதற்காக நள்ளிரவு வரை தெருக்களில் காத்துக் கிடக்கின்றனர். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, நான் அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, ஏற்கனவே அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதால் இதை அதன் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறச் செய்து தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இரண்டு வகையான சூழ் நிலைகளை எதிர்கொள்கிறோம். ஒன்று புயல் அல்லது வெள்ளம் மற்றொன்று வறட்சி, எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதுதான். இது திரும்பத் திரும்ப அனைத்து உறுப்பினர்களாலும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் அரசு தனியாக ஒரு அமைச்சரவையை அமைத்துள்ள இப் போதாவது இந்தப் பிரச்சினைக்கு உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நான் நம்பு கிறேன்.

நான் நான்கு முறை ஆலந்தூரில் மாநகராட்சித் தலைவராக இருந் தேன். நான் பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து நடத்தும் திட்டத்தின் கீழ், நிலத்தடி கழிவுநீர்க் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினேன். நாங்கள் 5000 ரூபாயை வைப்புத் தொகையாக (டெபாசிட்) வசூலித் தோம் மக்கள் அந்த வைப்புத் தொகையைச் செலுத்தினார்கள். நான் ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், நீங்கள் ஏதாவது செய்ய முன்வந்தால் மக்கள் ஏதேனும் நிதி வழங்கத் தயாராக இருக்கிறார்கள். நாம் தண்ணீரைப் பெறு வதற்கும் ஏதாவது செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

சென்னையில் கல் அள்ளும் குவாரி களைக் கொண்ட மலைகள் நிறைய இருக் கின்றன. அவை பழுப்பு மற்றும் கருப்பு நிறத் தண்ணீரைக் கொண்டுள்ளன. அவை வீணாகிக் கொண்டிருக்கின்றன. பருவ மழைக் காலத்தில் மழை நீர் கடலுக்குப் போய்விடுகிறது. இவை அறிவுபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு, தண்ணீர் சேகரித்து வைக்கப்படவேண்டும்.

மூத்த உடன் உறுப்பினர் திரு.டி. கே.ரெங்கநாதன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல கூவம் ஆற்றில் பச்சையப்ப முதலியார் குளித்தக்காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அது கெட்டுப்போன கழிவுநீர் ஆறாகிவிட்டது. தயவு செய்து இந்த எல்லாக் கழவுகளையும் அகற்றுங்கள்.

எனக்கு போதுமான அளவு நேரம் இல்லை. எனினும் நான் ஒரு கோரிக் கையை மத்திய அரசுக்கு வைத்து என் உரையை நிறைவு செய்யவிரும்புகிறேன். மத்திய அரசு தண்ணீரை பொதுப் பட்டியலில் இடம் பெறச் செய்யவேண்டும் அதற்குப் பதிலாக நீங்கள் கல்வியைப் பொதுப் பட்டியலில் சேர்த்துள்ளீர்கள் கல்வி தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. “நீட்” தேர்வையும் பிற பிரச்சினைகளை யும் எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தயவு செய்து “கல்வி” யை மாநிலப்பட்டி யலிலுக்கு மாற்றுங்கள், அத்துடன் நதிகள் மற்றும் தண்ணீரை பொதுப் பட்டியலில் இடம்பெறச் செய்யுங்கள். இச்சொற்களுடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக