அரசின் நோக்கம் ``அரசியல் அதிகாரம் அளிப்பது தானே தவிர, அரசியல் ரீதியாக சுரண்டுவது அல்ல'' என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி இன்று புதுடெல்லியில்கூறினார். இந்த அரசு மேற்கொண்ட பல ``துணிச்சலான, பெரிய சீர்திருத்தங்கள்'' நல்ல பலன்களைத் தருவதாக அமைந்துள்ளன. இது, எங்களின் நேர்மையான மற்றும் செம்மையான முயற்சிகளை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
``முஸ்லிம் பெண்கள் உரிமை தினத்தை'' ஒட்டி நடந்த இணையதளம் வழியிலான நிகழ்ச்சியில்,, மத்திய சட்டத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி ஆகியோருடன் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் கலந்து கொண்டார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. மஞ்சித் சிங் ராய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.