புதன், 17 ஜூலை, 2019

சட்டப்பேரவையில் நீட் மசோதாக்கள் குறித்து மு.க ஸ்டாலின், சி.வி.சண்முகம் காரசார விவாதம்

இரு மசோதாக்கள், 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இரு மசோதாக்கள், 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்.

கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், நீட் விலக்கு தொடர்பான இரு மசோதாக்கள் நிராக 21 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது. ஆனால், தமிழக அரசு இதனை மறைத்துள்ளது. குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டால் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அதை தீர்மானமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்கிற விதி உள்ளது. தற்போது 21 மாதங்களுக்கு மேலாகி விட்டதால் அந்த மசோதாக்களை மீண்டும் அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கேட்டு மத்திய அரசுக்கு 12 முறை கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அமைச்சர், காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றால் வழக்கு தொடரலாம் என்றார்.

அமைச்சரின் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், “இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறீர்கள். ஆனால் இன்னும் அதே நிலை தான் நீடிக்கிறது. இனி கடிதம் எழுதி விளக்கம் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை” எனத் தெரிவித்தார்.

நீட் மசோதா விவகாரத்தில் அவசியம் ஏற்பட்டால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக