வெள்ளி, 26 ஜூலை, 2019

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்


மீரா மிதுன் பற்றிய சர்ச்சைகள் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியிலும் உள்ளேவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 


மீரா மிதுன் முதல் வாரத்திலேயே அபிராமி மற்றும் சாக்‌ஷி பிரச்சனையை உருவாக்கினார். முகென் மற்றும் மீரா மிதுன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நீ யாருடன் வேண்டுமானால், பேசிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் பேசுறது எனக்கு பிடிக்காது. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லோஸ்லியாவும் உடன் இருந்தார். இவ்வளவு தான் நடந்தது. இதனைக் தவறாக நினைத்துக் கொண்ட சாக்‌ஷி, வனிதாவிடம் சென்று அபிராமி கிட்ட முகென் நீ பேசக் கூடாது என்று கூறியதாக காதில் விழுந்தது என்று குறிப்பிட்டார். முகினுடன் வாக்குவாதில் ஈடுபட்டார் பின்பு அபிராமியுடன் முடிந்தது




மீரா மிதுன் இரண்டாவது வாரத்தில் வீட்டின் உள்ளே தர்ஷனை அவர் காதலிப்பதாக சொல்லி பிரச்சனையை உருவாக்கினார். தர்ஷன் தனக்கு வேறு ஒரு காதலி வெளியில் இருப்பதாக கூறினார். தர்ஷனுக்கும் அவருக்கும் நெடுநாட்களாக பழக்கம் இருக்கிறதாம். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சனம் ஷெட்டி பிக் பாஸ் செட்டிற்கு வந்துள்ளார். மீரா மிதுனுக்கும் சனம் ஷெட்டிக்கும் உள்ள பகை பற்றி தர்ஷனுக்கும் தெரியும்  மீரா மிதுன் எல்லாம் தெரிந்து தான் வேண்டுமென்றே தர்ஷனை காதலிப்பதாக கூறுகிறார்.



மீரா மிதுன் முன்றாவது வாரத்தில் கவின் மற்றும் சாண்டி டார்கேட் செய்தார். பின்னர் சாக்‌ஷி தானாக வலையில் விழுந்தார், இதில் சாண்டி, கவின் தப்பித்தனர், பின்பு சாக்‌ஷியுடன் சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்திய மீரா.






மீரா மிதுன் நான்காவது வாரத்தில் மைனர் சரவணன், கீரிப்பட்டிக்கும் பாம்புப்பட்டிக்கும் இருந்த நெடுங்கால தொடர்பை கூறினார். அந்த கதையில் பாம்புப்பட்டி நாட்டமை சேரனின் மனைவி தான், கீரிப்பட்டி மதுமிதா. அவர்களுடைய மகள் தான் லோஸ்லியா என்று சரவணன் கதை சொன்னார். 

மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அப்போது, டாஸ்கின் அடிப்படையில் லோஸ்லியா ஒரு பொருளை திருடினார். அதை கையும் களவுமாக சேரன் பிடித்துவிட்டார். அப்போது லோஸ்லியா வைத்திருக்கும் பொருளை காப்பாற்ற மீரா முயற்சித்தார். இதை தடுக்க சேரன் உடனே மீராவை பிடித்து இழுத்து அந்த புறமாக போட்டார். 

 அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேச முன்வந்தார் மீரா. அதில் சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக