திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். - கே.பாலகிருஷ்ணன்


தேசிய கல்விக் கொள்கையை
முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். - கே.பாலகிருஷ்ணன்

கல்வியில் ஏற்படும் எந்த மாற்றமும் சமூக, பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காரணங்களாலேயே இந்த தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர்.

இதன் காரணமாகவே தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கல்வித் திட்டத்தை நிராகரிக்க கோருகின்றன. 

இந்த நிலையில், இன்று தமிழக அரசு மும்மொழி திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளாது எனவும் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்ததே. 

மும்மொழிக் கொள்கை என்பது இந்த திட்டத்திலுள்ள கைவிட வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று. அதேசமயம் மாநில உரிமை, சமூக நீதி, பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உத்தரவாதம் உள்ளிட்ட பல அம்சங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. 

இவற்றைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனவும்  இந்தக் கொள்கையை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும்  மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக