சுதந்திரத்தின் 75-வது மஹோத்சவ் –ஐ யொட்டி ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் 2021 அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பு வார விழாவை கொண்டாட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின் 75-வது மஹோத்சவ் விழாவையொட்டி 2021 அக்டோபர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் உடல் நலபரிசோதனை முகாம்கள் நடத்துவதற்கும் பிரதமரின் பாரதீய மருந்தக மையங்களில் முதல் உதவி பெட்டிகள் விலையின்றி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வார விழாவையொட்டி பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் மக்கள் மருந்தக பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்டோருடன் பொதுவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கலந்துரையாடல் நடத்துவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக