செவ்வாய், 19 அக்டோபர், 2021

இந்தியாவின் 75-வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாகனப் பயணம் மேற்கொண்டுள்ள தேசியப் பாதுகாப்புப் படை (NSG) வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

 இந்தியாவின் 75-வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாகனப் பயணம் மேற்கொண்டுள்ள தேசியப் பாதுகாப்புப் படை (NSG) வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியிலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவினர் லக்னோ, வாரணாசி, கயா, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், கோபால்பூர், விஜயவாடா, ஐதராபாத், ஓங்கோல் வழியாக பயணம் செய்து இன்று சென்னை வந்தனர்.

அப்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லை நெடுகிலும் தங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் ஜெய் ஹிந்த், மகாத்மா காந்தி வாழ்க என்று கூறி  உற்சாக வரவேற்பு அளித்ததாக வாகனப் பயணக்குழுவின் தலைவர் கர்னல் உமேஷ் ரத்தோட் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் தேசியப் பாதுகாப்புப் படையின் 12 அதிகாரிகள் மற்றும் 35 கமாண்டோ வீரர்கள் இடம்  பெற்றுள்ளனர். தாங்கள் கார் பயணம் மேற்கொள்ளும் வழியில் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை  பயணம் செய்து, அந்தந்தப் பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொண்டதாக அவர் கூறினார்.

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு புறப்பட்டுச் செல்லும் இக்குழுவினர், பின்னர் அங்கிருந்து மும்பை, அகமதாபாத் வழியாக மொத்தம் 7,500 கிலோ மீட்டர் பயணம் செய்து மீண்டும் தில்லி சென்றடையவிருப்பதாகவும் கர்னல் உமேஷ் ரத்தோட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக