நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்
வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது. துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போதைய நூல் விலையின் ஏற்றம் நிலை தொடர்ந்தால் கோடிக்கணக்கான ஏழை எழியவர் வேலை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய பியூஷ் கோயல் அவர்களுடைய நேற்றைய அறிவிப்பு சிறு, குறு தொழில் துறையினரிடம் மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் இந்த சூழ்நிலையில் திடமான முடிவுகளை அறிவிக்காமல் பெயர் அளவிற்கு அவருடைய அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நிலையில்லாத நூல் விலை ஏற்றம் எந்த விதத்திலும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் மற்ற ஏற்றுமதி நாடுகளோடு போட்டி போட்டு வெளிநாட்டு ஆர்டர்களை எடுக்க நம்பிக்கை தராது. இதற்கான தீர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக காண வேண்டும். நிலைமை கை மீறி சென்று கொண்டிருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் பெரும் அளவில் வேலை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக