ஞாயிறு, 23 மே, 2021

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் குறித்து மிரட்டுகிற தொனியில் அருவருக்கத்தக்க வகையில் பி.டி.தியாகராஜன் பேசி வருகிறார். - அர்ஜுன் சம்பத் கண்டனம்

 


ஜஸ்டிஸ் கட்சி அதாவது நீதிக்கட்சி பிரிட்டிஷார் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கை உடைய கட்சி! சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்த கட்சி! பண்ணையார்கள், மிட்டா மிராசு, ஜமீன் தார்கள், இவர்களின் கட்சி நீதிக்கட்சி! இந்த நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவர்தான் பி.டி.ராஜன்!

வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதில்  நீதிக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அதிலும் பி.டி.ராஜன் குடும்பத்தாருக்கு நிறைய பங்கு உண்டு!

சுதந்திர இந்தியாவில் நீதிக் கட்சியை சார்ந்த பலர் திமுகவில் தொடர்ந்தனர் அப்படி தொடர்ந்தவர்தான்

பி.டி. ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ராஜன் காலத்திலே மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலய நுழைவு அரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ச்சி வைத்தியநாத ஐயர் தலைமையில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் பாதுகாப்பில் நடைபெற்றது.

அப்பொழுது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் நீதிக்கட்சியினர் ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவானவர்கள் அரிஜன மக்களுக்கு எதிரானவர்கள் நீதிக்கட்சியினர்.

சின்னமனூர் ஜமீன்தாருக்கு வழக்கறிஞராக மதுரைக்கு வந்த பி.டி.ராஜனின் மூதாதையர்கள் ஜமீன் சொத்துக்களை பரிபாலனம் செய்து வந்தார்கள். ஜமீன் வழக்கப்படி கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டும் எனவே சில கோயில்களுக்கு திருப்பணியும் செய்தார்கள்.

அதே நேரத்தில் நீதிக் கட்சியில் இணைந்து வெள்ளையர்களுக்கு இந்த நாட்டை காட்டிக் கொடுத்தார்கள். சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தார்கள். சுதந்திரப் போராட்ட இயக்கங்களை ஆட்சி அதிகாரம் மூலமாக நசுக்க நினைத்தார்கள். பிரிட்டிஷாருக்கு துணை நின்றார்கள்.

தற்போதைய நிதி அமைச்சர்

பி.டி.தியாகராஜன் அவர்கள் சாதிவெறி மனப்பான்மை கொண்டவர். சவரத் தொழில் செய்யும் மருத்துவ சமுதாயத்தை இழிவாக பேசியவர், கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரில் மன்னிப்புக் கோரயவர்.வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டவர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பரப்பியவர். முத்துராமலிங்கத்தேவர், பி.டி. ராஜன் இடத்தில் பொருளாதார உதவி கோரி வீட்டுக்கு வந்தார், என்கின்ற அப்பட்டமான பொய்யை பொதுமேடையில் கூறியவர். 

ஐயா முத்துராமலிங்கத் தேவர் பரம்பரை ஜமீன்தார் அவருக்கு எப்பொழுதும் எந்த பொருளாதார நெருக்கடியும் வந்தது கிடையாது. முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்ட வீரர். தனது பரம்பரை சொத்துகளை உழைக்கும் மக்களுக்கு எழுதி வைத்தவர்.

பிரிட்டிஷாருக்கு ஆதரவான நீதிக்கட்சியை எதிர்த்து போராடியவர். சாதி வெறி பிடித்த நீதி கட்சியினருக்கு எதிராக அரிஜன மக்களுக்கு ஆதரவாக நின்றவர். முத்துராமலிங்கத்தேவர் ஐயாவை இழிவுபடுத்தி தவறான வரலாற்றுப் பதிவை ஏற்படுத்த முயன்றவர்தான் இப்போதைய நிதி அமைச்சர். 

தியாகராஜனின் சகவாச தோசம், திராவிடர் கழக தொடர்பு,கம்யூனிஸ்ட் இடதுசாரி இயக்கங்களின் தொடர்பு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தொடர்பு இதன் காரணமாக மந்திரி  தற்பொழுது காருண்யா கிறிஸ்தவ நிறுவனத்திற்கு ஆதரவாக, சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களுக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்து வருகிறார்.

புதிதாக நிதிமந்திரி பதவிக்கு வந்திருக்கின்ற தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலையை சீர் படுத்தாமல், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபடாமல், அரசுப் பணிகளை கவனிக்காமல், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களின் ஊதுகுழலாக நக்சல் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஊதுகுழலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது பசுமைக்கரங்கள் திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி மூலமாகத்தான் துவக்கி வைத்தார். சத்குரு அவர்களை திமுக தலைவர் கருணாநிதி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். 

ஈஷா  செய்து வருகின்ற பல்வேறு அறப்பணிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் இது தெரியாமல் ஊடகங்களில் ஊடுருவியுள்ள நக்சல் சிந்தனையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என தியாகராஜன் மோசடி மதமாற்ற கும்பலின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் குறித்து மிரட்டுகிற தொனியில் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்.அவருக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக