வெள்ளி, 2 ஜூலை, 2021

ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், மேற்கொள்ளப்படும் 20 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள 59 பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.


 நாட்டில் மேற்கொள்ளப்படும் 20 மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, திட்ட கண்காணிப்பு குழுவுடன் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் கடந்த மாதம் 29ம் தேதி ஆய்வு செய்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ், பீகார், ஹரியானா, தமிழ்நாடு அரசுகளின் தலைமை செயலாளர்கள் உட்பட மத்திய, மாநில அதிகாரிகள் பலர் கலந்துகா கொண்டனர். இதில் முக்கிய உள் கட்டமைப்பு திட்ட பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்சினைகள், மற்றும் குறித்த நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், மேற்கொள்ளப்படும் 20 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள 59 பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இவற்றில் 11 திட்டங்கள், பிரகதி திட்டத்தின் கீழ் பிரதமரால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவை.

கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடங்களை அமைப்பது, ரயில் நிலையங்கள் அருகே பொருளாதார மண்டலங்களை அமைப்பது, 7 மாநிலங்கள் வழியாக செல்லும் அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழில் வழித்தடம், கிழக்கு பகுதியில் பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடம் அமைப்பதன் மூலம் தொழில் உற்பத்தியை மேம்படுத்தும் வசதிகள் உட்பட பல திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. 

இத்திட்டங்களை சரியான நேரத்தில் தொடங்குவதற்கு, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அமைச்சர் திரு பியூஷ் கோயல் உத்தரவிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் மிக முக்கியமான இந்த உள்கட்டமைப்பு திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக