திங்கள், 5 ஜூலை, 2021

தஞ்சைத் தரணியில் புகழ்பெற்ற பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இன்னொரு தூண் சாய்ந்தது, பூண்டி அய்யாறு வாண்டையார் மறைவு! - வைகோ இரங்கல்

 பூண்டி அய்யாறு வாண்டையார் மறைவு! - வைகோ இரங்கல்

தஞ்சைத் தரணியில் புகழ்பெற்ற பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இன்னொரு தூண் சாய்ந்தது. கடந்த மே மாதம் பூண்டி திருபுட்பம் கல்லூரியின் செயலாளர் - தாளாளர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் மறைந்தார்கள். அந்த சோகம் மறைவதற்குள் அவரது இளைய சகோதரர் அய்யாறு வாண்டையார் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

பூண்டி குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த மறைவுச் செய்திகள் வேதனையையும் ஆற்றொணா துயரத்தையும் தருகிறது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சர் பொறுப்பிலும் அரசியல் பணியாற்றிய அய்யாறு வாண்டையார் அவர்கள் பல பொதுநல அமைப்புகளில் முன்னின்று மக்களுக்குத் தொண்டு புரிந்தார். 2014 இல் தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி அவரைச் சிறப்பித்தது.

ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு கல்வி புகட்டிய பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடு செய்ய இயலாதது ஆகும்.

திரு அய்யாறு வாண்டையார் அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக