புதன், 8 ஜனவரி, 2020

இளைஞர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்பட கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்


சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) கேள்வி நேரத்தின்போது  காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எழுந்து வேண்டுகோள் 
விடுத்தார்.

முருகுமாறன் MLA : வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை  வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் : கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் நவீன ரக மீன் வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் பேசிய அமைச்சர் இளைஞர்கள் பலரும் அரசுப் பணிக்கு முயன்று வருகின்றனர். அவர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்படாமல் தொழில்முனைவோர் ஆக முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்புத் தொழிலுக்கு அரசு மானியம் வழங்கத் தயாராக உள்ளது. ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு செய்தால் 10 மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். மீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கண் பார்வை கோளாறு, கேன்சர் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் நம்மை அண்டாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக