ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்


சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், பேசியதாவது தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மக்களுக்கு தடையின்றி நேரடியாக தொண்டு செய்ய உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது. மக்கள் நம் கட்சியின் மீதும், நம் மீதும் வைத்துள்ள நம்பிக்கை என்றும் குறையாமல் இருக்க தொடர்ந்து உழைப்போம். வெற்றிக்கு அரும்பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் பேசிய பொன்னார் “தமிழகத்தில் பாஜகவின் காலம் துவங்கிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது” என்று குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம். பாஜக தனித்தே போட்டியிட்டிருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக