புதன், 1 ஜனவரி, 2020

எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - டிடிவி தினகரன்

புத்தம் புதிய நம்பிக்கைகளுடனும், உற்சாகத்துடனும் பிறக்கும்
புத்தாண்டில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். - டிடிவி தினகரன்

இனம், மதம், மொழி, நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து உலகெங்கும் மக்கள் கொண்டாடுகிற நாளாக புத்தாண்டு அமைந்திருக்கிறது.
தமிழக மக்களைப் பிடித்த துயரங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறப்பதற்கு வழி காட்டுகிற ஆண்டாக இந்த 2020 புத்தாண்டு அமையட்டும். அடிமைச் சிறுமதியாளர்கள் அடகு வைத்திருக்கும் உரிமைகளும், தமிழகத்தின் நலன்களையும் மீட்டெடுப்பதற்குப் பாதை அமைத்துத் தரப்போகிற ஆண்டாக மலரட்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்து மாண்புகளையும் வலிமையையும் தமிழகம் மீண்டும் பெறுவதற்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும், உத்வேகத்தையும் தருவதற்கும் இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும்.

வேளாண்மையும் தொழில்களும் செழித்திடவும், உழைக்கின்ற அத்தனை மக்களும் உயர்வினைப் பெற்றிடவும் உகந்த சூழல் உருவாகட்டும். மொத்தத்தில் புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிற வளமான ஆண்டாக திகழட்டும் என வாழ்த்துகிறேன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக