திங்கள், 27 ஜனவரி, 2020

பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது வருத்தம் அளிக்கிறது - நடிகர் சூர்யா


நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனின் கடந்த வந்த பாதை குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சிவகுமார் மற்றும் அகரம் நிறுவன நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் சூர்யா பேசினார். தொடர்ந்து பேசிய அவர்,சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே தற்போதும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர் இல்லை எனவே அகரத்தால் பயனடைந்த மாணவர்கள் தாங்கள் படித்தப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நேரம் செலவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். சமூகத்தை பற்றியும் யோசிப்பதுதான் வாழ்க்கை என தெரிவித்த அவர், குடும்பம், சமூகம், செய்யும் தொழில் மூன்றுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக