இந்திய பொருளாதார மந்தநிலை அனைத்து துறைகளிலும் உள்ளது. உதாரணமாகப் போக்குவரத்துத் துறையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அது சிறிது சிறிதாக அதிகரித்து உற்பத்தித் துறை முழுவதுமாக முடங்கி உள்ளது. வர உள்ள நிதிநிலை அறிக்கை மிகவும் கடுமையாக இருக்கும்.
மத்திய அரசு தன்னிடம் உள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் இஷ்டப்படி செலவு செய்துள்ளது. இதனால் அரசு தற்போது திவா லாகும் விளிம்பு நிலைக்கு வந் துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவு செய்ய வேண்டும் எனப் பலரும் கூறி வரும் வேளையில் அரசு செலவைக் குறைப்பது குறித்துப் பேசி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தனியார் முத லீடுகள் வெகுவாக குறைந்து தற்போது பூஜ்ஜியம் என்னும் நிலைக்கு வந்துள்ளது.
கடந்த முறைகளில் இல்லாத அளவுக்கு 13 நிதி நிலைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களைப் பிரதமர் மோடி நடத்தி உள்ளார். முன்பு இத் தகைய கூட்டங்களை நிதி அமைச்சர்கள் நடத்தி வருவார்கள். இதற்குக் காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும். அதை மறைக்க அரசு குடியுரிமை சட்டத் திருத்தத் தைக் கையில் எடுத்துள்ளது. அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடெங்கும் அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவை இரண்டுமே மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் திட்டங்கள் ஆகும்.
மத்திய அரசு பொருளாதார அடிப்படையில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால் அந்த பிரச்சினை களைக் கண்டுக் கொள்ளாமல் அரசு அனைத்தும் சரியாக உள்ளதாகத் தவறான புள்ளி விவரங்களைக் காட்டி வருகிறது. ஆனால் அந்த தவறான புள்ளி விவரங்களை எப்போதும் காட்ட முடியாது. இனி அவர்கள் பிரச்சினைகள் உள்ளதை ஒப்புக் கொண்டு அதற்காக என்ன செய்ய உள்ளனர் என்பதைக் கூற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக