கருப்பு பூஞ்சை என்றழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் இருப்பு போதிய அளவுக்குமேல் வைக்கப்படும் என மத்திய ரசாயண மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் மியூகோமைகோசிஸ் பாதிப்பு கடந்த 16ம் தேதி நிலவரப்படி 27,142. எதிர்காலத்தில், கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்தால், ஆம்போடெரிசின் பி மருந்தை போதிய அளவுக்கு மேல் இருப்பு வைக்க இந்தியா தயாராக உள்ளது. இதன் உள்நாட்டு உற்பத்தியை 5 மடங்குக்கு மேல் இந்தியா அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
கடந்த மே 11ம் தேதி முதல், ஜூன் 17ம் தேதி வரை, 7,28,045 லிபோசோமல் ஆம்போடெரிசின் பி குப்பிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகளுக்கு மருந்துகள் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்துக்கு 25,260 குப்பிகளும், புதுச்சேரிக்கு 460 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக