புதன், 4 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு & புதுச்சேரி வருமானவரி தலைமை இயக்குனராக (புலனாய்வு) திரு.சுனில் மாத்தூர் பொறுப்பேற்பு


 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி தலைமை இயக்குனராக (புலனாய்வு) திரு.சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி உயர்வு பெற்று, வாரணாசியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்துள்ளார்.

திரு.சுனில், 1988 இந்திய வருவாய் பணி அலுவலர்கள் அணியைச் சேர்ந்தவர். இவர் குஜராத், ராஜஸ்தான், தில்லி, கொல்கத்தா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர்பதவி வகித்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2014-15 ஆம் ஆண்டில் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் லி குவான் யு பொதுக் கொள்கை பள்ளியில் பொது நிர்வாகத்தில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக