வெள்ளி, 1 அக்டோபர், 2021

பேராசிரியர் ஜெயராமன் மீது கொலைமிரட்டல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! - கே. பாலகிருஷ்ணன்

 பேராசிரியர் ஜெயராமன் மீது கொலைமிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! - கே. பாலகிருஷ்ணன்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் கடந்த 19.9.2021 அன்று நடந்த ஒரு கருத்தரங்கில் தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிட, பெரியார் எதிர்ப்பு குறித்து பேசியோருக்கு தனது கருத்தை தெரிவித்து பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் மிக, மிகக் கீழ்த்தரமான சொற்களால் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவது, அவதூறுகள் செய்வது, கூட்டமைப்பினர் கடைகளுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுவது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

பேராசிரியர் ஜெயராமன் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்.  கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கொலை மிரட்டல் விடுவது, ஆபாசமாக பேசுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதுடன், பேராசிரியர் ஜெயராமன் மீது கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக