டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராடும் மக்கள் மீதான தாக்குதலில் மனிதாபிமானத்தோடு தீர்வு கண்டிட எதிர்க்கட்சிகள் அமைதி ஊர்வலம் நடத்திட அமைதிக்குழுக்கள் அமைத்திட அனுமதிகோரி சீத்தாராம் யெச்சூரி, பிரஃபுல் படேல், டி.ராஜா, டி.ஆர்.பாலு, மனோஜ்குமார் ஜா, சரத் யாதவ், சஞ்சய் சிங், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற குழுத்தலைவர்கள் மேதகு குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடித விவரம்:
மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே,
இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்களைச் சந்தித்து டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, ஏறத்தாழ 37 பேர் மரணமடையவும் - 200 பேருக்கு மேல் படுகாயமடையவும் உள்ள நிலையில், இதுகுறித்து எங்கள் கவலையையும் - அக்கறையையும் தங்களுக்குத் தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.