செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அதிமுக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும் நாடற்றவர்களாக்கப்படுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறை வேற்றப்பட்டபோது பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த அய்க்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உள்ளன. கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசும் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான கையேடும் வெளியிடப்பட்டு விட்டது. கணக்கெடுக்கும் பணி தொடங்கியதும் யாரை சந்தேகப் படுகிறார்களோ அவர்கள் மீது அதிகாரிகள் சந்தேக முத்திரை குத்த முடியும். அப்படி முத்திரை குத்தப் பட்டால் தீர்ப்பாயத்திற்கு சென்று தான் தீர்வு பெற முடியும் என்ற நிலை உள்ளது.

அசாம் மாநிலத்தில் கணக் கெடுப்பு பணி முடிந்தபோது அம்மாநில மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் நாடற்றவர்களாக்கப் பட்டனர். இந்தியா முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்பு (என்.பி.ஆர்), தேசிய குடி மக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டால் இந்தியா முழுவதும் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்படுவார்கள். இவர்களை அடைப்பதற்காக 26 ஆயிரத்து 658 திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.12 லட்சம் கோடி செலவாகும் என வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் ஒரு சிறுபான்மையினர் கூட பாதிக்கப்படமாட்டார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். கூட்டணி தர்மத்திற்காக அவர் பாரதீய ஜனதாவுக்காக இப்படி வக்காலத்து வாங்கி வர லாற்று பிழையை செய்து உள்ளார். பாரதீய ஜனதா செய்கிற பாவத்தை அ.தி.மு.க.வும், அவர்களது கூட்டணி கட்சிகளும் ஏற்கப் போகிறார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று தான் நினைக்க தோன்றுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அவர்கள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைத்து விட்டால் நமது நாட்டில் இந்து, முஸ்லிம் என பிரிவினையை உண்டாக்கி ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்திவிடலாம் என்பது தான் மோடியின் திட்டம். அதனை செயல்படுத்த தான் மோடியும், அமித்ஷாவும் துடிக்கிறார்கள். அதனை எதிர்த்து டில்லியில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ள பேரணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக