தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இயக்க ஆற்றலை மாற்றியமைப்பது தொடர்பான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், தேசிய பணமாக்கல் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி இலக்குடன் சாலைகள் 26 சதவீதப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.